உகந்தை முருகனாலய வண்ணக்கர் பாம்பு தீண்டி மரணம்

வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தை ஸ்ரீ முருகனாலய வண்ணக்கர் முத்துபண்டா சுரேந்திரராஜ்(வயது 35) கருநாகம் தீண்டி மரணித்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை பொத்துவிலுள்ள அவரது கடைத்தொகுதியில் வைத்து நாகம் தீண்டியவுடன் உடனடியாக பொத்துவில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு இரண்டு நாட்கள் சிகிச்சைபெற்றிருந்த நிலையில் நேற்று மரணித்துள்ளார்.

  பலவருடங்கள் வண்ணக்கராக இருந்து 2013 இல் மரணித்த புஞ்சிமாத்தயா முத்துபண்டாவின் மகனான சுரேந்திரராஜ் அண்மைக்காலமாக வண்ணக்கராகக் கடமையாற்றிருந்தார்.

 அவரது பூதவுடல் தற்போது பொத்துவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.