மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த மூன்று வாரத்திற்கு முன்னர் மட்டகளப்பினை சேர்ந்த யுவதியொருவர் குறை மாதத்தில் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த குழந்தையானது போதனா வைத்தியசாலையில் விசேட சிசுக்கள் சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது.
கடந்த மூன்று வாரமாக குறித்த குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை தொடக்கம் வைத்தியசாலையில் இருந்து வந்த குறித்த குழந்தையின் தாயார் தலைமறைவாகியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்