பனிச்சங்கேணி அரசி வன்னி நாச்சியாரின் 465ஆவது ஆண்டு விழா

கிழக்கிலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக பனிச்சங்கேணி அரசி வன்னி நாச்சியாரின் 465ஆவது ஆண்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. 

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா தலைமையில் நடைபெறும் இவ் விழாவில் கோரளப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர்.ராகுலநாயகி, கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா, கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர். 

நிகழ்வில், நினைவுப் பேருரையினை பிரபல எழுத்தாளர் வாகரை வாணன் நிகழ்த்துவார். 

அத்துடன், கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயம், பால்சேனை அ.த.க. பாடசாலை, வாகரை மகா வித்தியாலயம், மாங்கேணி றோ.க. கலவன் பாடசாலை, பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயம், காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயம் ஆகுpய பாடசாலை மாணவ மாணவிகளின கிராமிய நடனம், கரகம், இலக்கிய நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.