கண்டி - மாத்தளை பிரதான வீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் திருகோணமலையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டியில் இருந்து மாத்தளையை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் மாத்தளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் காலை 6.10 மணி அளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் உயிரிழந்தவர் திருகோணமலையை சேர்ந்த செல்லையா
ராமசாமி ஸ்ரீ ராமகிருஷ்ணன் என்ற 23 வயதுடைய இளைஞர் என
அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்தில் மரணித்தவர் சென்ற மோட்டார் சைக்கிளின் வேகம்
கட்டுக்கடங்காது எதிரே வந்த பஸ் வண்டியில் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இவ் விபத்து தொடர்பாக பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியில் இருந்து மாத்தளையை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் மாத்தளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் காலை 6.10 மணி அளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் உயிரிழந்தவர் திருகோணமலையை சேர்ந்த செல்லையா
ராமசாமி ஸ்ரீ ராமகிருஷ்ணன் என்ற 23 வயதுடைய இளைஞர் என
அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்தில் மரணித்தவர் சென்ற மோட்டார் சைக்கிளின் வேகம்
கட்டுக்கடங்காது எதிரே வந்த பஸ் வண்டியில் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இவ் விபத்து தொடர்பாக பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.