திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த இளைஞர் விபத்தில் மரணம்

கண்டி - மாத்­தளை பிர­தான வீதியில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற வாகன விபத்­தில் திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார்.

கண்­டியில் இருந்து மாத்­த­ளையை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் மாத்­த­ளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி­யதில் காலை 6.10 மணி அளவில் இவ் விபத்து ஏற்­பட்­டுள்­ள­தாக அல­வத்­து­கொடை பொலிஸார் தெரி­வித்­தனர்.


இவ் விபத்தில் உயி­ரி­ழந்­தவர் திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த செல்­லையா
ராம­சாமி ஸ்ரீ ராம­கி­ருஷ்­ணன் என்ற 23 வய­து­டைய இளைஞர் என
அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.

விபத்தில் மர­ணித்­தவர் சென்ற மோட்டார் சைக்­கிளின் வேகம்
கட்­டுக்­க­டங்­காது எதிரே வந்த பஸ் வண்­டியில் மோதி இவ்­வி­பத்து ஏற்­பட்­டுள்­ள­தாக நேரில் கண்­ட­வர்கள் தெரி­வித்­துள்­ளனர். இவ் விபத்து தொடர்பாக பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.