பஷில் ராஜபக்ஷ சற்று முன் நாடு திரும்பினார்

(பேரின்பராஜா சபேஷ்) முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சற்று முன் நாடு திரும்பியுள்ளார்
லண்டன் மற்றும் டுபாய் வழியாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த முன்னாள் அமைச்சரை வரவேற்பதற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் விமான நிலையத்துக்கு செல்லும் வீதியில் இருமருங்குகளிலும் காத்திருக்கின்றனர்

விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பசில் ராஜபக்ஸ நாட்டை வந்தடைந்தவுடன் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.