துறைநீலாவணை இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் கலாசார விளையாட்டு நிகழ்வு

(சா.நடனசபேசன்)
துறைநீலாவணை இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டிலும் பொதுமக்களும் இணைந்து தமிழ்சிங்களப்புத்தாண்டினை முன்னிட்டு மாபெரும் கலாசார விளையாட்டுநிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை அதன் தலைவர் அ.வேளராசு தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் சிறப்பதிதியாக மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் விசேடஅதிதியாக பிரதேசசெயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம்  பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் உதவிதிட்டமிடல் பணிப்பாளர் திருமதி .தி.கிருபைராசா   மற்றும்  பொறியியலாளர்களான கே.விஜயரதன் ரி.பாரதன்  மற்றும் கிராமசேவகர்கள் அதிபர்கள் ஆலயங்களின் தலைவர்கள் பொதுஅமப்பின் தலைவர்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்


இறுதியாக பரிசளிப்பு இடம்பெற்றதுடன் அதன் அமைப்பின் செயலாளர் மன்முனைதென்எருவில்பற்று பிரதேசசெயலகத்தின் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் தி.தயாளனின் நன்றியுரையுடன் நிகழ்வுஇடம்பெற்றது

அத்தோடு இவ்விளையாட்டுப்போட்டி நடாத்துவதற்காக துறைநீலாவணை மண்ணின் மைந்தர்களும் அவுஸ்ரேலியாவில் தொழில்புரியும் கி.சஜந்தன் யோ.தினேஸ் பி.ரசிகரன்  கே.யோகேஸ்வரன் எஸ்.தனேஸ் மற்றும் மத்தியகிழக்கு நாட்டில் தொழில்புரியும் கே.கிரிதரன் பி.ஜெயந்தன் மற்றும் சரவணாஸ் நகை உரிமையாளர் ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர் அவர்களுக்கும் துறைநீலாவணை இளைஞர் அமைப்பு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்