(சமி)மண்டூர் விஷ்ணுவிளையாட்டுக் கழகத்தின் 20வது ஆண்டு நிறைவு விழா கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை கழகத் தலைவர் க. முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.இன் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக பிரதம அதிதிகள் விசேட அதிதிகள் மற்றும் கௌரவ அதிதிகள், ஆன்மிக அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
அன்றைய தினம் 2014ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவ, மாணவிகளை பாராட்டி மட்டக்களப்பு மாவட்ட யூனியன் அஷ்யூரன்ஸ் பீ.எல்.சீ காப்புறுதி நிறுவனத்தினர் பெறுமதிவாய்நத சான்றிதழ் வெற்றிக் கிண்ணம் வழங்கி கௌரவித்தனர்.இந்த கௌரவிப்பபு விழாவில் யூனியன் அஷ்யூரன்ஸ் பீ.எல்.சீ காப்புறுதி நிறுவனத்தின் விற்பனை முகாமையாளர் சிறிபுஸ்பகாந் கலந்து சிறப்பித்ததார். மாணவர்களுக்கு மேலும் பரிசில்களளை கல்முனை அவான்ஸ் நிறுவனத்தினர், சொர்ணம் நகை மாழிகை மற்றும் ராஜா புத்தகச்சாலையினர் வழங்கிவைத்தனர்.