மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதான வளாகம் விஸ்தரிப்பு


(சிவம்)
மட்டக்களப்பு மாநகர சபையினால் பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானம் விஸ்தரிக்கப்படும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த டச்சுக் கோட்டை, கோட்டைப் பூங்கா, கணணி மயப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் வாசிகசாலை என்பன அமையப்பெற்ற இப்பிரதேசம் அதிகமானோரைக் கவர்ந்து வருவதனால் மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் குறித்த பிரதேசம் புனரமைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சீரான உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியின்மையால் ஏற்படும் நோய்களைக் கட்டப்படுத்தும் நோக்கோடு வாவியை அண்டிய சுகாதாரமிக்க இப்பிரதேசம் மக்களின் வேண்டுகோளிற்கிணங்க கனரக இயந்திரங்களின் உதவியினால் மாநகர சபையின் ஆளணிகளைக் கொண்டு புனரமைப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உதவி மாநகர ஆணையாளர் என். தனஞ்செயன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.