பழுகாமத்தில் இடம்பெற்ற சித்திரை கலாசார விளையாட்டு விழா

(தாஸ்)
பழுகாமப் பரம்பரை ஒன்றியமும் சூட்டிங் ஸ்ரார் விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்திய மாபெரும் சித்திரை கலாசார விளையாட்டுப் விழா கடந்த 18.04.2015 அன்று இடம்பெற்றது. இந்நிகழவுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அம்மணி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். அவர்களுடன் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரத்னம் அவர்களும் பழுகாமப் பரம்பரையின் இலண்டன் தலைவர் பெஞ்சமின் பாலா அவர்களும் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
பல கலாசார விளையாட்டுகள் இடம்டிபற்றன் பெருமளவான மக்களும் போட்டிகளில் பங்குபற்றியமையும் குறிப்பிடத்தக்கது.