வாகரை பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், அங்கு இரத்ததான முகாம் திங்களன்று (20) இடம்பெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் தலைமை வைத்தியர் கே. விவேகானந்த் தலைமையில் இரத்தம் சேகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

அரச திணைக்கள, கூட்டுத்தாபன அதிகாரிகளும் பொதுமக்களும் இந்த இரத்த தான முகாமில் கலந்து கொண்டு இரத்தத்தை தானமாக வழங்கினர்.
வாகரை பிரதேச செயலாளர், எஸ் ஆர் ராகுலநாயகி, கால்நடை வைத்திய அதிகாரி வைத்தியர் என்.எச்.என் பிரியங்கா தேவமனோகரி உள்ளிட்ட அதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்க வாகரைக் கிளை இந்த இரத்ததான முகாமுக்கு அனுசரணை வழங்கியிருந்தது.