கல்முனைப் பிரதேசத்தில் செயற்கை சுவையூட்டிகளை உணவுப்
பொருட்களில் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என கல்முனை வடக்கு சுகாதார பணிமனை தெரிவித்துள்ளது.
கல்முனை வடக்கு சுகாதாரப் பணிமனைக்குட்பட்ட கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சேனைக்குடியிருப்பு நற்பிட்டி முனை, மணல்சேனை ஆகிய பிரதேசங்களிலுள்ள பழக்கடைகள் சிலவற்றில் செயற்கை முறையில் பழங்களை கனியவைத்து விற்பனை செய்யும்
நடவடிக்கையில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்று தயாரிக்கப்படும் சிற்றூண்டி வகைகள்,
உணவுப்பொருட்களில் செயற்கை சுவையூட்டிகளும் கலக்கப்படுகின்றன.
இவை மக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்துள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஆர்.கணேஷ்வரன் தெரிவித்தார். கல்முனை வடக்கில் செயற்கைமுறையில் பழம் மற்றும் உணவுகளை தயார்படுத்தும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொருட்களில் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என கல்முனை வடக்கு சுகாதார பணிமனை தெரிவித்துள்ளது.
கல்முனை வடக்கு சுகாதாரப் பணிமனைக்குட்பட்ட கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சேனைக்குடியிருப்பு நற்பிட்டி முனை, மணல்சேனை ஆகிய பிரதேசங்களிலுள்ள பழக்கடைகள் சிலவற்றில் செயற்கை முறையில் பழங்களை கனியவைத்து விற்பனை செய்யும்
நடவடிக்கையில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்று தயாரிக்கப்படும் சிற்றூண்டி வகைகள்,
உணவுப்பொருட்களில் செயற்கை சுவையூட்டிகளும் கலக்கப்படுகின்றன.
இவை மக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்துள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஆர்.கணேஷ்வரன் தெரிவித்தார். கல்முனை வடக்கில் செயற்கைமுறையில் பழம் மற்றும் உணவுகளை தயார்படுத்தும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.