வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தினால் புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வு

(த.லோகதக்சன், ஜெ.ஜெய்ஷிகன்)

வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தினால் மன்மத வருட மில்லர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

கழகத்தின் தலைவர் ர.சஜப்பிரதாப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை பணிப்பாளர் எஸ்.நைரூஸ், மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் ஜே.கலாராணி மற்றும் கழக உறுப்பினர்கள், பொது மக்கள், சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது தழிழர் கலை, கலாசார, பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் பல இடம்பெற்றதுடன், வெற்றியீட்டியவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.