கோரகல்லிமடு யங் ஹீரோ விளையாட்டுக் கழகத்தினால் கலாச்சார விளையாட்டு நிகழ்வு

(த.லோகதக்சன்)

பிறந்துள்ள மன்மத வருடப்பிறப்பினை சிறப்பிக்கும் முகமாக கிரான் கோரகல்லிமடு யங்  ஹீரோ விளையாட்டுக் கழகத்தினால் சிறப்பான முறையில் திங்கட்கிழமை மாலை கலாச்சார விளையாட்டு நிகழ்வு கோரகல்லிமடு ஸ்ரீ ரமணமகரிஷி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.


கழகத்தின் தலைவர் க.நந்தகோபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின்; கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராஜசிங்கம் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராசா, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கிரு.செயோன் ஆகியோருடன் கிராம பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பலவாறான களிப்பூட்டும் கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், புலமைப் பரிசில் மற்றும் சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விசேடமாக இங்கு விசேட தேவையுடையோருக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.