மட்டக்களப்பு மாநகர சபையும் சக்தி TV/FM இணைந்து மாபெரும் சித்திரைப் புத்தாண்டு களியாட்ட நிகழ்வு எதிர்வரும் 26.04.2015 அன்று பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் (மாநகர சபைக்கு அருகாமையில்) நடைபெறவுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளும் இடம்பெறவுள்ளன. போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் மாநகர சபை அலுவலகத்தில் உள்ள விசேட கருமபீடத்தில் தங்களை முன் பதிவுசெய்து கொள்ளுமாறும் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்படுமெனவும் மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.
போட்டி விபரங்கள் பின்வருமாறு:
- சைக்கில் ஓட்டம் (ஆண்கள்)
- மரதன் ஓட்டம்) (ஆண்கள்)
- மரதன் ஓட்டம் (பெண்கள்)
- தோணியோட்டம்
- வழுக்கு மரம் ஏறுதல்
- கயிறு இழுத்தல் (ஆண்கள்)
- கயிறு இழுத்தல் (பெண்கள்)
- முட்டி உடைத்தல்
- தலையணைச் சமர்
- சாக்கோட்டம்
- சோடா குடித்தல் (ஆண்கள்)
- சோடா குடித்தல் (பெண்கள்)
- தேங்காய் துருவுதல் (பெண்கள்)
- ஒலை பின்னுதல்
- பலூன் உடைத்தல் (சிறுவர்கள்)
- யானைக்கு கண்வைத்தல்
- Bumping Station
- வேக நடை
- மெதுவாக சைக்கில் செலுத்துதல்
- வினோத உடை
- சங்கீதக் கதிரை
- மிட்டாய் பொறுக்குதல் (சிறுவர்கள்)
- சிரிப்புப் போட்டி
சைக்கில் ஓட்டம் (ஆண்கள்), மரதன் ஓட்டம்) (ஆண்கள்), மரதன் ஓட்டம் (பெண்கள்), தோணியோட்டம் என்பன 26.04.2014 அன்று காலை 6.00க்கு இடம்பெறவுள்ளதுடன் ஏனைய போட்டிகள் யாவும் பி.ப. 3.00 முதல் நடைபெறும்.
மேலும் மாலை 7.00 முதல் சக்தி TV/FM இனால் நடாத்தப்படும் இன்னிசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது
போட்டியில் பங்குபற்றுவதற்கான விண்ணப்பப் படிவம்: