துறைநீலாவணை மகாவித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 (பிறின்ஸ் ) புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  குற்றவாளிகளை தண்டிக்க கோரியும் துறைநீலாவணை மகாவித்தியாலய மாணவர்களின் கண்டன பேரணி ஒன்று  இன்று இடம்பெற்றது. மாணவர்கள் பல்வேறு பதாதைகளையும் சுலோகங்களையும் ஏந்தியவண்ணம் பாடசாலைக்கு முன்புறம் தரித்துநின்று தங்களது கண்டனத்தையும் நீதி வேண்டிய ஏக்கத்தையும் வெளிப்படுத்தினர். மாணவர்கள் பலவித கோசங்களை எழுப்பியவண்ணம் வீதியில் நின்றிருந்மை அவர்களின் ஏக்கத்தை தெளிவாக உலகிற்கு வெளிக்காட்டுவதாய்  அமைந்திருந்தது.