வித்தியாவின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகத்தினரின் கண்டனப்பேரணி (video)

(படுவான் பாலகன்) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கொலைக்கு காரணமாகவிருந்த கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்து இன்று(22) வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கண்டனப்பேரணி இடம்பெற்றது.
கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமான இப்பேரணி கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானம் வரை சென்றது. இதில் கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், பழையமாணவர்கள், ஈஸ்வரா விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மாணவர்கள் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும், பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பல சுலோபங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.