(படுவான் பாலகன்) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவை சேர்ந்த சி.வித்தியாவின் ஆத்மா நல்லமுறையில் சாந்தியடைய வேண்டி முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வித்தியாலய அதிபர் சி.அகிலேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது வித்தியாவின் கொலைக்கு நீதி வேண்டும் என்றும், இதுபோன்ற கொலைகள் இனியும் நடைபெறக்கூடாது எனவும் கூறி மாணவர்கள் சுலோபங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இதில் பாடசாலை மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.