குற்றாவளிகளுக்கு எந்த வழக்கறிஞர்களும் ஆதரவாகக்கூடாது – மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய மாணவர்கள் கண்டனப்பேரணி (video)

(படுவான் பாலகன்) க.பொ.த.உயர்தரத்தில் கல்வி கற்ற மாணவியான வித்தியாவுக்கு ஏற்பட்ட மிலேச்சதனமான கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில் வித்தியாவுக்கு ஏற்பட்ட அநீதி போன்று யாருக்கு ஏற்படக்கூடாது, அநீதி ஏற்படுத்தியவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞர்களும் ஆதரவு செலுத்தக் கூடாது எனவும் குறிப்பிட்டனர்.