மட்டக்களப்பின் பல பகுதிகளில் கடையடைப்பு

(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை கடையடைகள் பூட்டப்பட்டள்ளன.
அதேவேளை தூரப் பிரதேச போக்கு வரத்துக்கள் வழமை போன்று இயங்குவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
பொதுச் சந்தைகள், வர்த்தக நிலையங்கள் என்பவை மூடப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் பாடசாலைகள் இயங்கவில்லை.
இதேவேளை அலுவலகங்கள் வங்கிகள் என்பன மட்டக்களப்பின் பல பகுதிகளில் வழமை போன்று இயங்குகின்றன.
இதேவேளை முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் வழமைபோன்று வெள்ளிக்கிழமை பெரிய தொழுகைக்கான (ஜும்மாத் தொழுகை) பூரண கடையடைப்பு இன்றைய தினமும் இடம்பெற்றுள்ளது.