வடிகானிலிருந்து ஆண் சிசுவொன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோளாவில் பிரதேசத்திலுள்ள     வடிகான் ஒன்றிலிருந்து ஆண் சிசுவொன்று கைவிடப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
தொப்புள்கொடியுடன் காணப்பட்ட இந்த சிசு மீட்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.