(சிவம்)
யாழ். புங்குடுதீவில்; வித்தியா சிவலோகநாதன் எனும் பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் பாடசாலையின் முன்றலில் நடைபெற்றது.
கொலையாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும், பாடசாலை மாணவிகளின் பாதுபாப்பை உறுதிப்டுத்து, கொலையாளிகள் தப்பிக்க சட்டத்தரணிகள் முன்வரக் கூடாது போன்ற கண்டன அறிக்கைகளைத் தாங்கிய பதாதைகளுடன் சுமார் 300 மாணவர்கள் வாயையும் மற்றும் கைகளையும் கட்டியபடி கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.