சிறு­மியை கடத்திச் சென்று குடும்பம் நடத்­திய இளைஞன் கைது

15 வயதுச் சிறு­மி­யொ­ரு­வரை கடத்தி சென்று குடும்பம் நடத்­திய
குற்­றச்­சாட்டின் பேரில் இளைஞன் கைதுசெய்­யப்­பட்­டுள்­ள­தாக
வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர். இச்­சம்­பவம் கடந்த 16 ஆம் திகதி
இடம்­பெற்­றுள்­ளது.

மீரா­வோடை பரி­கா­ரியார் வீதியை சேர்ந்த 15 வயது சிறு­மியே இவ்­வாறு கடத்தி செல்­லப்­பட்டு மறைத்து வைக்­கப்­பட்­ட­தாக வாழைச்­சேனை பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர். இச்­சம்­பவம் குறித்து சிறு­மியின் தாய் வாழைச்­சேனை பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்தே இளைஞன் கைதுசெய்­யப்­பட்டார்.


குறித்த சிறுமி அந்த இளை­ஞனால் அழைத்துச் செல்­லப்­பட்டு 9 நாட்கள் குடும்ப வாழ்க்கை நடத்­தி­ய­தாக ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களில் இருந்து தெரிய வந்­துள்­ளது. இதன் பின்னர் கைது செய்­யப்­பட்ட குறித்த இளைஞன் வாழைச்­சேனை நீதி­மன்­றத்தில் ஆஜர்செய்­யப்­பட்டு விளக்க­ ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறித்த யுவதியை பரி­சோதித்து வைத்­திய அறிக் கையை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.