திருகோணமலையில் கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரி ஜனாதிபதியால் திறந்து வைப்பு

(கதிரவன் )
ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன  ஞாயிற்றுக்கிழமை 28.06.2015 காலை கிழக்கு பிராந்திய கடற்படைத்தளத்தில் (டொக்iகாட்) கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியைத் திறந்து வைத்தார்.

ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதையும் நிகழ்த்தப்பட்டது. இதனைத் தொர்ந்து கடற்படை படகுகளின் அணிவகுப்பும் கடலில் மேற்கொள்ளப்பட்டது.