அரசடித்தீவு அருள் மிகு ஶ்ரீ முத்துமாரியம்மனின் 6ம் நாள் தவநிலைச் திருசடங்கு

(சிறிகரன் ) வந்தாரை வாழவைக்கும் மகிமை கொண்ட அரசையூரில் மருத நிலம் தாலாட்ட மந்தியொடு மயிலினமும் தாவி விளையாடும் தரிசு நிலக் களனிகளும் தேவியது மகிமைதனைத் தேநாட்டில் பறைசாற்றும் அரசடித்தீவு அருள் மிகு ஶ்ரீ முத்துமாரியம்மனின் 6ம் நாள் தவநிலைச் திருசடங்கானது மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றன.