மட்டக்களப்பு மாவட்டத்தில் 365167 பேர் வாக்களிக்க தகுதி ! 414 வாக்களிப்பு நிலையங்கள்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்க 3,65,167 பேர் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.

இதன்படி மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும் கல்குடா தொகுதியில் 1,05,056 பேரும் பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


இதேவேளை இம் மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள.

மட்டக்களப்பில் 199 நிலையங்களும் கல்குடாவில்115 நிலையங்களும் பட்டிருப்பில் 100 நிலையங்களும் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலக நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் மேலும் கூறியுள்ளார்.