மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி தப்பியோடிய சம்பவத்துடன் அதிகாரியொருவருக்கு தொடர்பு ! மூவர் பணி நீக்கம் செய்யப்படலாம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவிக்கின்றது

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த தகவல்கள் வௌியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஸ்குமார தெரிவிக்கின்றார்.


சிறைக் கைதி தப்பியோடியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில் சிறைச்சாலையின் உத்தியோகாத்தர்கள் மூவர் பணி நீக்கம் செய்யப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் குறித்து பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். பொலிஸாரின விசாரணைகளை அடுத்து கைதி தப்பியோடிய சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய உத்தியோகத்தர்கள் பணி
நீக்கம் செய்யப்படுவார்கள் என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.