சுவிட்சர்லாந்தில் ஈழத் தமிழ் உறவுகளின் வாழ்வியலை மேம்படுத்தும ஆன்மீக நிகழ்வு


(சிவம்)
ஈழத் தமிழ் உறவுகளின் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கோடு வாழும்போது வாழ்த்துவதும் மற்றும் ஒருவரின் செய் நன்றியை உணர்ந்து நடப்பதும் மானிட ஜென்மம் எடுத்த மனிதனின் அடிப்படை பண்புகளுள் ஒன்றாகும்.

இவ்வாறு சுவிட்சர்லாந்தில் உள்ள ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் சுவாமி சரவணபவனந்தா தெரிவித்தார்.

சிறுவர்களே எதிர்கால தலைவர்கள் இவர்களுக்கு இதைத் தெளிவுபடுத்துவதனால் அவர்களின் வாழ்வில் ஏற்படும் சவால்களுக்கு முகம் கொடுத்து வெல்வதற்கான ஒரு ஏணியாகும். இது எனது நம்பிக்கை என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வு யூலை மாதம் 3, 4, 5 ஆம் திகதிகளில் சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.