மாகாண மட்ட விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற றாணமடு மாணவிக்குப் பாராட்டு



பாடசாலைகளிடையே நடாத்தப்பட்ட மாகாணமட்டவிளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்த சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட றாணமடு இந்து மகாவித்தியாலய மாணவி பி.லிங்கேஸ்வரியை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று 30  அதிபர் கே.தியாகராசா தலைமையில் வித்தியாலய கேட்போர் கூடத்தில் .இம்பெற்றது

அதேவேளை பாடசாலையில் உற்பத்திசெய்யப்பட்டு ஒடியல் செய்யப்பட்ட பனங்கிழங்கும் விற்பனை செய்யப்பட்டதுடன் பாடசாலை வளாகத்தில் நிழல் தரும் மரமும்  வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ் நஜீமால் நடப்பட்டது
இந்நிகழ்வில் அதிதிகளாக வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் நாவிதன்வெளிக்கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து வேள்ட்விசன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ரி.ரொபின்சன் மார்சல் உதவிக்கல்விப்பணிப்பாளர் பிரேமானந்த உட்பட பலர் கலந்து கொண்டனர்