இந்து மகளீர் மன்ற வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு

(வேணு)
இந்து மகளீர் மன்ற வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு அதன் தலைவி திருமதி மனோகரி சீவரெட்ணம் தலைமையில் மட் -புளியந்தீவு இந்து மகளீர் மன்ற மண்டபத்தில் இடம்பெற்றது.

இராமகிருஷ்ண மிஷன் சுவாமி அவர்களது ஆசியுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வைத்திய கலாநிதி திருமதி குணவதி விவேகானந்தராஜா கலந்துகொண்டார்.  கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மகா சபைக் கூட்டமும் புதிய அங்கத்தவர் தெரிவும்  இங்கு இடம்பெற்றது.