மட்-திருப்பழுகாமம் ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

(வரதன்)
படுவான்கரையில் பிரசித்தி பெற்ற திருப்பழுகாமம் ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 26.06.2015 அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான இவ்வாலய உற்சவம் 01.07.2015 தீர்த்தோற்சவம் இடம்பெற்று பின் சர்க்கரையமுது நிகழ்வுடன் இனிதே நிறைவடையவுள்ளது
.
 மட்டு மாவட்டத்தில் தற்போது மாரியம்மன் ஆலயங்களில் உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் தொன்று தொட்டு பெண்கள் தங்கள் நேத்திக்ககடன்களை நிறைவேற்றும் முகமாக மடிப்பிச்சை எடுத்து வரும் நிகழ்வு விஷேட அம்சமாகும்
.
இவ்வாலயத்திலும் இப்பகுதி மக்கள் இன்று மடிப்பிச்சை எடுக்கும் உன்னதவழிபாட்டுநிகழ்வில் கலந்துகொண்டனர்
 இவ்வாலய உற்சவ நிகழ்வுகள் ஆலயப் பிரதமகுரு சிவ ஸ்ரீ மு.சாம்பசிவக்குருக்கள் தலைமையில் இடம்பெற்று வருகிறது.