எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் நாட்டுமக்களுக்கும் அரசாங்கத்துக்கும் தெளிவான செய்தியை சொல்ல தயாராகிக்கொண்டிருக்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பின்போது சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தை திருகோணமலை யில் நடத்தியிருக்கிறோம்.
ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு பலமுக்கியமான அவசரமான முடிவுகளை எடுக்க வேண்டிய, ஆராயவேண்டிய விடயங்கள் இருக்கிறன்றன. அதுபற்றியெல்லாம் மத்திய குழு உறுப்பினர்கள் ஆழ மாக ஆராய்ந்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கமாக இருக்கின்ற தமிழரசுக்கட்சி எவ்விதம் போட்டியிட வேண்டும். வட, கிழக்கில் எப்ப டியான சிறந்த வெற்றியை ஈட்டிக் கொள்ள வேண்டும் என்பது பற்றியெல்லாம் தீர்க்கமாக ஆராய்ந்துள் ளோம்.
மாவட்டம் ஒவ்வொன்றிலும் தொகுதிவாரியாக வேட்பாளர்களை நிறுத்துவது தொடக்கம் தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தல் வெற்றிக்கான திட்டமிடல், மக்களுக்கு நாங்கள் வழங்க வேண்டிய வாக்குறுதிகள் பற்றியெல்லாம் கலந்து பேசியிருக்கிறோம்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தை நடைபெறவுள்ள தேர்த லில் பயனுள்ள மாற்றமாக கொண் டுவரலாம் என்பது பற்றி ஆராய்ந் துள்ளனர் மத்திய குழுவினர்.
தமிழ் மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான அரசியல் தீர்வு மற்றும் மக்களின் உடனடிப்பிரச்சினைக ளான மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வாழ்வாதாரம், காணிப்பிரச்சினை கள், காணாமல்போனோர் பிரச்சி னைகள் சம்பந்தமாக நடைபெறவுள்ள தேர்தலில் நாம் அடையும் வெற்றியினூடாக எவ்வாறு தீர்வைக்காணமுடியும் என்பதுபற்றி ஆக்கபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அங்கத்தவர்களின் அனைத்து கருத்துக்களையும் உள்வாங்கி அதற் கான முழுப்பரிகாரங்களையும் காண முயற்சிகளை மேற்கொள்ளவுள் ளோம்.
இதுதவிர பங்காளிக் கட்சிக ளுக்கு வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கவேண்டிய இடம்பற்றியெல் லாம் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள டங்க வேண்டிய விடயங்கள் பற்றி தெளிவாகவும் நிதானமாகவும் கலந் துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பின்போது சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தை திருகோணமலை யில் நடத்தியிருக்கிறோம்.
ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு பலமுக்கியமான அவசரமான முடிவுகளை எடுக்க வேண்டிய, ஆராயவேண்டிய விடயங்கள் இருக்கிறன்றன. அதுபற்றியெல்லாம் மத்திய குழு உறுப்பினர்கள் ஆழ மாக ஆராய்ந்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கமாக இருக்கின்ற தமிழரசுக்கட்சி எவ்விதம் போட்டியிட வேண்டும். வட, கிழக்கில் எப்ப டியான சிறந்த வெற்றியை ஈட்டிக் கொள்ள வேண்டும் என்பது பற்றியெல்லாம் தீர்க்கமாக ஆராய்ந்துள் ளோம்.
மாவட்டம் ஒவ்வொன்றிலும் தொகுதிவாரியாக வேட்பாளர்களை நிறுத்துவது தொடக்கம் தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தல் வெற்றிக்கான திட்டமிடல், மக்களுக்கு நாங்கள் வழங்க வேண்டிய வாக்குறுதிகள் பற்றியெல்லாம் கலந்து பேசியிருக்கிறோம்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தை நடைபெறவுள்ள தேர்த லில் பயனுள்ள மாற்றமாக கொண் டுவரலாம் என்பது பற்றி ஆராய்ந் துள்ளனர் மத்திய குழுவினர்.
தமிழ் மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான அரசியல் தீர்வு மற்றும் மக்களின் உடனடிப்பிரச்சினைக ளான மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வாழ்வாதாரம், காணிப்பிரச்சினை கள், காணாமல்போனோர் பிரச்சி னைகள் சம்பந்தமாக நடைபெறவுள்ள தேர்தலில் நாம் அடையும் வெற்றியினூடாக எவ்வாறு தீர்வைக்காணமுடியும் என்பதுபற்றி ஆக்கபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அங்கத்தவர்களின் அனைத்து கருத்துக்களையும் உள்வாங்கி அதற் கான முழுப்பரிகாரங்களையும் காண முயற்சிகளை மேற்கொள்ளவுள் ளோம்.
இதுதவிர பங்காளிக் கட்சிக ளுக்கு வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கவேண்டிய இடம்பற்றியெல் லாம் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள டங்க வேண்டிய விடயங்கள் பற்றி தெளிவாகவும் நிதானமாகவும் கலந் துரையாடப்பட்டுள்ளது.