மகிழூர்முனைக் கிராமத்தில் மின் ஒழுக்கினால் வீடு முற்றாக எரிந்து சேதம்

(ரேவநிசாந்) 
மட்டக்களப்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரேதேச செயல கத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் முனைக்110B கிராமத்தில்  பிராமணர் வீதியில் வசிக்கும் சகாயராசா மேரி அவர் களின் வீட்டில் மின் ஒழுக்கி னால்  ஏற்பட்ட தீயினால் வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. 27.07.2015 அன்று திங்கட்கிழமை பின்னேரம் சகோதரி விட்டுக்கு சென்றிருந்த வேளையில் இச்சம்வம் இடம் பெற்ற தாகவும் உடனடியாக இலங்கை மின்சார சபை களுவாஞ்சிகுடி காரியா லயத்துக்கு அறிவித்ததையடுத்து மின் துண்டிக்கப்பட்டு அயலவர்களின் உதவியுடன் தீ அனைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவி த்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த பொருட்கள்முற்றிலும் எரிந்து விட்டது. இது தொடர்பாக கிராமசேவை உத்தியோகத்தர் வருகைதந்து பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டு உரிய அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக கூறினார். இக்குடும்பத்தினரக்கு உதவும் முகமாக மகிழூர்முனை ஸ்ரீ மண்டபத்தடி பிள்ளையார் ஆலயபரிபாலன சபையினர் ஒரு தொகை உணவுப்பொருட்களை வழங்கி வைத்தனர்.எனவே இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இக்குடும்பத்திற்கு வாழ்வாதார உதவிகளை நல்குமாறு கிராமமக்கள் வேண்டுகின்றனர்.