திருகோணமலை கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரான்ஸ் நிறுவனம் ஒன்றுடன் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.
இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய கிழக்கு கடற்பரப்பில் எண்ணெய்வள ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.