பாராளுமன்றத் தேர் தல் நடவடிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈடுபட்டுள்ள என்னைச் சந்திக்க மக்கள் அணிதிரண்டு வருகின்றமை கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வெற்றிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்று முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்தார். ஏறாவூரில் நடைபெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், இன்று சிலர் கொள்கை! கொள்கை என்று உரத்துக்கூறிக்கொண்டிருக் கிறார் கள். கொள்கை என்றால் என்ன..? என்று அவர்களிடம் நாம் கேட்க வேண் டும். ஒவ்வொரு மனிதனுக்கும் கொள்கை இருக்கும். தன்னூருக்கு சிறந்த பாடசாலை வேண்டும், பாதைகள், வைத்தியசாலை, சிறந்த தொழில் நிலையங்கள், இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு அமைய வேண்டும் என விரும்புவார்கள். இப்படிக் கொள்கை இருப்பவன்தான் மனிதன். கொள்கை இல்லையென்றால் வாழ்க்கை இல்லையென்றாகிவிடும். எனவே கொள்கை கொள்கை என்போர் தான் வாழனும் அதிலும் மக்களை மடையர்களாக்கித்தான் தான் வாழனும் என்னும் கொள்கையில் சிலர் அலைமோதுவதாக நினைக்கத் தோன்றுகிறது. நமது கொள்கைக்கு ஒரு வரைவிலக்கணம் வேண்டும் அந்தக் கொள்கையை இதற்காகத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற சரியான முறையும் தெரிந்திருக்க வேண்டும். மாறாக கொள்கை கொள்கை என்று தொண்டை கிழிய மேடையேறிப்பேசிவிட்டு, தான் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தால் கொள்கை எல்லாம் குப்பையில்தான் போடவேண்டிய நிலை ஏற்படும். ஆகவே இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை புத்துணர்ச்சியுள்ள ஒரு கட்சியாகவும் அதன் போராளிகளை சரியான முறையில் வழிநடத்தவும், கவனிக்கவும் புதிய யுகம் கையாளப்பட வேண்டும், பழையன மறந்து புது யுகத்தில் அனைவரையும் ஒன்றாக அரவணைத்துச் செல்லவேண்டிய தார்மீகப் பொறுப்பு கட்சியில் உள்ள அனைவருக்கும் உள்ளன. எனவே இன்று யாரை எடுத்தாலும் ஒவ்வொருவரும் முறைப்பாடு கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கெல் லாம் சரியான தீர்வுபெறப்பட வேண்டும், அனைத்திற்கும் பதிலளித்து கட்சி புதுப்பொலிவுடன் இருக்க வேண்டும் என்றால் தலைவரின் தியாகத்தில் அனைவரும் கைகொடுத்து செயற்பட வேண்டும். தலைமைத்துவம் என்பது நாம் நினைப்பது போன்று விளையாட்டுக்கழகங்களின் தலைமைத்துவம் போன்றதல்ல. ஆகவே ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொருவரும், அனைத்தும் ஒரே நேரத்தில் கிடைக்கவேண்டும் என்று நினைப்பது எந்தவகையில் நியாயம் இல்லையோ அதுபோல கட்சியின் தலைவரை நெருக் குவதனையும் நாம் சற்று விலக்கி மற்றவர்களுக்கும் மற்ற ஊர்களுக்கும் இடம்கொடுத்து நமக்கான வற்றை நாம் முயற்சித்துப் பெற்றுக் கொள்ள பழகிக் கொள்வோம் என்றும் தெரிவித்தார்.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4