மட்டக்களப்பு மாவட்ட அரச ஒப்பந்தகாரர் சங்கத்தின் தலைவராக வி.றஞ்சிதமூர்த்தி தெரிவானார்


மட்டக்களப்பு மாவட்ட அரச ஒப்பந்தகாரர் சங்கத்தின் பொதுக்கூட்டம் இன்று (26.07.2015) மட்/மாமாங்கம் விக்னேஸ்வரர் திருத்தொண்டர்சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது சங்கத்தின் மூலம் எதிர்காலத்தில்
மேற்கொள்ளப்படவேண்டிய பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் புதிய நிருவாகசபைத் தெரிவும் இடம்பெற்றது.
இதன் புதிய தலைவராக, மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகமான தேசகீர்த்தி, சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக பி.புவனேந்திரபதி, பொருளாளராக ரி.குமரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். உப தலைவர்களாக நளீம், மற்றும் வ.வரதராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் உப செயலாளராக கே.சிவகுமார் தெரிவு செய்யப்பட்டார்.
மற்றும் ஆலோசகர்களாக எஸ்.வசந்தகுமார், என்.ஆர்.பத்மநாதன், பி.சசிகுமார், ஆர்.பஞ்சாமிர்தம் ஆகியோரும் உறுப்பினர்களாக ஜெ.ஆனந்தரூபன், கே.வசந்தகுமார், சி.மனாளன், எம்.எச்.பைறூஸ், கே.திருச்செல்வம், பி.நவநீதன், எ.ஐ.ரமேஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.