(ஹுஸைன்)
வந்தாறுமூலை ஊருக்குள் வியாழக்கிழமை அதிகாலை நுழைந்த சுமார் 7 அடி நீளமான முதலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் இந்த முதலை ஊர்ந்து வந்துள்ளது.
ஆபத்தை விளைவிக்கக் கூடிய இந்த முதலையை ஊர்மக்கள் சேர்ந்து கட்டி வைத்து விட்டு ஏறாவூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் முதலையைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
வந்தாறுமூலை ஊருக்குள் வியாழக்கிழமை அதிகாலை நுழைந்த சுமார் 7 அடி நீளமான முதலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் இந்த முதலை ஊர்ந்து வந்துள்ளது.
ஆபத்தை விளைவிக்கக் கூடிய இந்த முதலையை ஊர்மக்கள் சேர்ந்து கட்டி வைத்து விட்டு ஏறாவூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் முதலையைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.