(படுவான் பாலகன்) வரலாற்று சிறப்புமிக்கதும், தேரோடும் திருத்தலமும், சுயம்பு லிங்கம் வீற்றிருக்கும் பதியுமாகிய கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்திற்கான திருக்கொடியேற்றம் எதிர்வரும் 14.09.2015ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்று தொடர்ச்சியாக திருவிழாக்களும் அதனை தொடர்ந்து 27.09.2015ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும் அன்றிரவு திருவேட்டையும் இடம்பெற்று மறுநாள் 28.09.2015ம் திகதி திங்கட்கிழமை தீர்தோற்சவத்துடன் இனிது நிறைவு காணப்பட இருப்பதாக இன்று(30) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேசமகா சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஆலய வளர்ச்சி தொடர்பான பல்வேறு விடயங்கள் பற்றி ஆராய்யப்பட்டது.