வீட்டில் இருந்தவர்களைக் கட்டி வைத்துவிட்டு துணிகரக் கொள்ளை

 (சிவம்)
வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கிக்கட்டில் உள்ள வீடொன்றிலிருந்து பொருட்கள் நேற்றிரவு (02) கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது 

நேற்றிரவு குடும்பத்தினர் உறக்கத்திலிருந்த வேளையில் கத்தி மற்றும் தடிகளுடன் இருவர் வீட்டினுள் உட்புகுந்து வீட்டில் இருந்த இருவரின் வாய்கள் மற்றும் கண்களைக் கட்டி ரூபாய் 96,900 பெறுமதியான 2 பவுண் நகைகள், பணம் ரூபாய் 10,000, இரு கையடக்கத் தொலைபேசிகள் என்பவற்றை திருடிச் சென்றதாக பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட குற்றம் நடந்த இடத்தைப் பரிசோதிக்கும் பிரிவினர் விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுணதீவுப் பொலிசார் கொள்ளையர்களை கைது செய்வதற்கான விசாரணைகளில் ஈடுபட்டள்ளனர்.