செங்கலடியில் விபத்து


(செங்கலடி  டினேஸ், சுபஜன்)
மட்டக்களப்பு செங்கலடி பிரதான வீதியில் தனியார் பஸ் வண்டி ஒன்றுக்கும் கனரக வாகனத்திற்குமிடையில் இன்று (30) நன்பகல் 12 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ் வண்டி கனரக வாகனத்தை முந்திச் செல்கையிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. பஸ்ஸில் பயணித்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ஏறாவூர் போலிசார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பில் பொலிசார் விசாரனையை நடாத்தி விருகின்றனர்.