விபத்தில் மாணவன் பலி

(சுபஜன்)
மட்டக்களப்பு ஏறாவூர்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னப்புல்லுமலையில் நேற்று (23) இரவு இடம் பெற்ற விபத்தில் கொம்மாதுரையைச் சேர்ந்த சுவேந்திரச்செல்வன் சுரேஸ்காந்தன், வயது 17 என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.  மேட்டார் சைக்கிலின் அதி வேகம் காரணமாகவே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டு பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று 
(24 )காலை உயிர் இழந்துள்ளார். சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் பிரேத பிரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொலிசார் இது குறித்து விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.