இதன்போது சௌந்தரராஜா மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் இத் தேர்தலானது தமிழ் மக்களுக்குமிக முக்கியமான தொன்றாகும் இத் தேர்தலில் எல்லோரும் வாக்களிக்க செல்வேண்டும் , எமது பிரதேசத்திலிருந்து தகுதியான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் மூலம் எமது கல்வி , பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை எங்களால் முன்னேற்ற செய்யமுடியும் என கூறினார் .
தொடர்ந்து வேட்பாளர் சிறிநேசன் உரையாற்றுகையில்,
நாங்கள் அளிக்கும் வாக்குகள் வேறுபக்கம் போகுமாயின் எமது உரிமைகள் பறிபோகும் , ஆகவே தமிழர்களின் உரிமைக்காக போராடும் ஒரே ஒரு கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாத்திரமே உங்கள் வாக்குகளை அளியுங்கள் . வேறு எந்த கட்சிக்கும் வாக்களிப்பதனால் எதிர்காலத்தில் நமது உரிமைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் . மக்கள் அனைவரும் சிந்தித்து செயற்படவேண்டும் .