த.தே. கூட்டமைப்பு வேட்பாளர்களான சௌந்தரராஜா - சிறிநேசன் இணைந்து பிரச்சாரம்

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வின் போது  தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களான  ஜீ.சௌந்தரராஜா ஞா.சிறிநேசன் ஆகிய இருவரும்  ஒன்றிணைந்து தங்களது தேர்தல் பிரச்சாரத்த்தில் ஈடுபட்டனர் .


இதன்போது   சௌந்தரராஜா  மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் இத் தேர்தலானது தமிழ் மக்களுக்குமிக முக்கியமான தொன்றாகும் இத் தேர்தலில் எல்லோரும் வாக்களிக்க செல்வேண்டும் ,  எமது பிரதேசத்திலிருந்து தகுதியான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் மூலம்   எமது கல்வி , பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை எங்களால் முன்னேற்ற செய்யமுடியும் என கூறினார் .
தொடர்ந்து வேட்பாளர் சிறிநேசன் உரையாற்றுகையில்,
 நாங்கள் அளிக்கும் வாக்குகள் வேறுபக்கம் போகுமாயின் எமது உரிமைகள் பறிபோகும் , ஆகவே தமிழர்களின் உரிமைக்காக போராடும் ஒரே ஒரு கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு  மாத்திரமே உங்கள் வாக்குகளை அளியுங்கள் .  வேறு எந்த கட்சிக்கும் வாக்களிப்பதனால் எதிர்காலத்தில் நமது உரிமைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் .  மக்கள் அனைவரும் சிந்தித்து செயற்படவேண்டும் .