மட்டக்களப்பில் 12 வயது சிறுவனை காணவில்லை!

(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு பொலீஸ் பிரிவிலுள்ள கருவேப்பங்கேணி யைச்சேர்ந்த 12 வயது சிறுவன் தனியார் வகுப்புக்குச் சென்று திரும்பி வரும்போது காணாமல் போயுள்ளார்.

கருவேப்பங்கேணி நாவலர் வீதியைச்சேர்ந்த கணேஸ் டிலக்சன் (வயது-12) எனும் சிறுவன் நேற்று 19ம் திகதி காலை 9மணியளவில் தனது துவிச்சக்கர வண்டியில் தனியார் வகுப்புக்கு சென்று வீடு திரும்புகையில் காணாமல்போயுள்ளார்.

இவர் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் தரம் 7 கல்வி பயிலும் மாணவனாவார்.

இவர் காணாமல் பேன விடயம் தொடர்பாக மட்டக்களப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அறியத்தரவும்

0776032177  ( உறவினர் )
0771660248  ( Battinews)