கொழும்பு பல்கலைக் கழகத்திலிருந்து சுற்றுலாச் சென்ற 30 பௌத்த பீட பிக்கு மாணவர்களில் ஒருவர் செவ்வாய்க்கிழமை மாலை பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்புப் பல்கலைக் கழகத்தின் முதலாமாண்டு பிக்கு மாணவனான குருநாகலை பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரானந்த ஹிமி (வயது 22) என்பவரே நீரில் மூழ்கி மரணித்தவராகும்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கல்குடாப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.