(வரதன்)
கரவெட்டி அரசினர் கலவன் பாடசாலை புலமைப் பரிசில்பரீட்சை முடிவுகளில் மாவட்டத்தில் 3ம் இடத்தைப் பெற்று துள்ளது சுதாகர் -அஸ்வினி என்ற மாணவியே 189புள்ளிகளைப்பெற்று சாதனை படைத்துள்ளர்.
அதுமட்டுமல்லாதுமேலும் 5மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்
இப்பகுதியில்வாழும் மக்கள் காட்டு யானைத்தாக்கத்தினாலும் குடிநீரின்றியும் பௌதீக வளப் பற்றாக்குறையினாலும் பாதிக்கப்பட்டுக்காணப்படும் சூழலிலும் கூட இப்பரீட்சையில் இவ்வாறான பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை பெருமைகுரியதாகும்.
பாடசாலைக்க கற்றலுடன் வீட்டுக்கற்றலிலும் மடடுமே இம்மாணவர்கள் ஈடுபட்டு எதுவித பிரத்தியேக வகுப்புக்களுக்கம் செல்லாது கற்றமை மிகச்சிறப்பம்சமாகும் என மட்டு மேற்குவலய கல்வி பணிப்பாளர் சத்தியநாதன் தொரிவித்தார்.