கல்குடா வலய விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் மாணவர்கள் சித்தி!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்/ககு/விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் இவ்வருடம் இரு  மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் 2015ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இரு மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.

இவர்கள் விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் விபரங்கள் : த.லதுர்சன் பெற்ற புள்ளி 163, ம.தர்சனா பெற்ற புள்ளி 156.

இப் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற இரு மாணவர்களையும் மற்றும் நூறு புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட மாணவர்களையும் பெற்றோர்,அதிபர்,ஆசிரியர்கள் வாழ்த்துகின்றனர்.