வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலத்தில் சிறுவர்கள் தினம் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வுகள்!

கல்குடா கல்வி  வலயத்திலுள்ள வந்தாறுமூலைவிஷ்ணுமகாவித்தியால ஆசிரியர் தினம் வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் உயர்தரமாணவர்களினால் நடாத்தப்பட்ட உலக ஆசிரியர் தினம் உயர்தரமாணவன் செல்வன். நே.நிஷாந்தன் தலைமைல் ஆரம்பிக்கப்பட்டு 

அதிபர்  எஸ்.மேகன். பிரதி அதிபர் கி.ரேமாபாதம் மற்றும்அங்கு கற்பிக்கும் ஆசிரியர். ஆசிரியைகளினால் சுடர் ஏற்றப்பட்டு அவர்கள் மாணவர்களினல் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது. 

இதேவேளை இப் பாடசாலையில் சர்வதேச சிறுவர்கள் தினம்  பாடசாலை அதிபர்  தலைமையில் அண்மையில் கொண்டாடப்பட்டது. 

இந் நிகழ்வுகளின்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.