செங்கலடி ரமேஸ்புரத்தில் குடும்பப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

செங்கலடி ரமேஸ்புரத்தில் குடும்பப்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் நேற்று 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில் ரமேஸ்புரத்தில் வசிக்கும்   2 வயது பெண் குழந்தையின் தாயான 25 வயதான கிறிஸ்டி கல்ப்பனா  என்ற குடும்ப பெண்னே தனது வீட்டின் மண்டப அறையிலுள்ள மின் விசிறியில் சாரியினால் சுருக்கிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் காணப்படுவதுடன் சம்பவ இடத்தில் கைத்தொலைபேசி ஒன்று உடைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பானமேலதிக விசாரணையினை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.