முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழா

(படுவான் பாலகன்) முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பெருந்தகைகளை கௌரவிக்கும் ஆசிரிய தினநிகழ்வு வித்தியாலய சுவாமி விபுலானந்தர் கலை அரங்கில் மிகச்சிறப்பாக இன்று(06) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன் போது அதிதிகள், ஆசிரியர்கள் மாலை அணிவித்து மாணவர்களின் பேண்ட் வாத்தியத்துடன் பாடசாலையின் முகப்பில் இருந்து மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டு மாணவர்களால் ஆசிரியர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாணவர்களது, ஆசிரியர்களது கலைநிகழ்வுகளும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவ சங்கத்தினர், பெற்றார் அபிவிருத்தி சங்கத்தினர், நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.