வின்செனற் மாணவி தக்ஸநியா புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளில் கிழக்கு மாகாணத்தில் முதலாமிடம்


(வரதன்)

வெளியாகியுள்ள 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளில் வின்செனற்  மாணவி பத்மசுதன் தக்ஸநியா 193 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலாமிடத்திற்கு தெரிவாகியுள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் தெரிவித்தார்

இவர் மட்டக்களப்பு மாவட்ட தொலைத்தொடர்பு பரிவர்த்தன நிலையத்தின் பணிப்பாளரான M..பத்மசுதன் DR. சர்வானந்தி தம்பதிகளின் ஏகபுதல்வியாவார்.இதேவேளை

 கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய மாணவன் ஜெகதீசன் சஜீதன் 190 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் - மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வவுணதீவு கரவெட்டி அரசினர் கலவன் தமிழ் பாடசாலையின் மாணவி சுதாகர் அஸ்வினி மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் முகம்மட் ஜவாஹிர் அகமட் முஷாரப் ஆகியோர் 189 புள்ளிகளைப் புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் மூன்றாவது இடத்தினைப்பெற்றுள்ளனர்.