சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தினம் சிறப்பாக அனுஸ்டிப்பு!

(ஜெ.ஜெய்ஷிகன்)
சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் ஆசிரியர் தினம் பாடசாலையின் முதல்வர் மா.தவராஜா அவர்களின் தலைமையில் மிகவிமர்சையாக இன்று (2015.10.06) நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் முதன்மை அதிதியாக கோறளைப்பற்றுக் கல்விக் கோட்டத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.நாகலிங்கம் குணலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்துடன் பாடசாலையின் பிரதி அதிபர்களான திரு.டா.கெஸ்டன், திரு.சி.சிவகுமார்  மற்றும் ஆசிரியர் குழாம், கல்வி சாரா ஊழியர்கள் பெருந்திரளான மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மிக விமரிசையாகி நடைபெற்றது. படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.